FEATUREDLatestNature

கதிர்குருவி Plain Prinia – Prinia Inornata

Spread the love

6 வருட கனவின் நனவாக, கடந்த 8 மாதங்களாக பறவைகளின் ஆர்வலனாக நான் கேமரா வாங்கியது முதல் அருகேயுள்ள இயற்கை செழிப்புள்ள இடங்களுக்கு தினமும் காலையில் பயணித்து, மிக பொருமையுடன் அவைகளையும், அந்த இயற்கை வாழ்விடங்களையும் ரசித்து, பதிவு செய்து வந்த எனக்கு முதல் மைல் கல்லாக, என் கேமராவில் பதிவு செய்த ஐம்பதாவது பறவையினம் இந்த கதிர்குருவி. இப்பயணம் இன்று போல் நூறாவது, ஆயிரமாவது என மேல் நோக்க சிவனின் சித்தம் அருள் புரியட்டும்.🙏🙏🙏

கதிர்குருவி/ Plain Prinia(Prinia Inornata)

கதிர் குருவி ஒரு சிறிய பறவை எனினும் இவை விவசாயத்துடன் நெருங்கி பல சூழ்நிலைகளில் வாழ்வதுண்டு. இது முன்பு செம்பட்டைக்கால் கதிர்க்குருவி என்று எண்ணப்பட்டது. எனினும் செம்பட்டைக்கால் கதிர்க்குருவி சகாரா பாலைவனத்தின் தெற்கு காணப்பெறும் தனி இனம் என்று பிறகு பிரிக்கப்பட்டது.

Prinia inornata என்ற விலங்கியல் பெயர் கொண்ட இப்பறவை தென்கிழக்கு ஆசியாவில் பாகிஸ்தான் முதல் இந்தியா மற்றும் தெற்குசுனா வரை பரவிய வலசை வாரா பறவையினம். ஒரே இடத்தில் தங்கி இனவிருத்தி செய்யும்.

உருவமைப்பு

இவை 13 முதல் 14 செ.மீ. நீலம் வரை வளரக்கூடியவை. வட்ட வடிவ சிறகுகளும், நீண்ட வாலும், பலம் பொருந்திய கால்களும், சிறிய குட்டையான கருத்த அலகும் உண்டு. அடிப்பகுதி இளஞ்சாம்பல் நிறத்தையும், மேல்பகுதி கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இனவிருத்தி காலங்களில் உடலின் மேல்பகுதி சாம்பல் நிறம் கொள்ளும். இருபாலினமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும்.

உணவு

மற்ற சிறுகுருவிகள் போன்றே கதிர்க்குருவி பூச்சியுண்ணிகள். குளக்கரைகள், புல் படுக்கைகள், நதிக்கரைகள், வயல்வெளிகள், காடுகள் என்று எங்கெல்லாம் பூச்சிகள் உள்ளனவோ, அங்கெல்லாம் இவை பல்கிப்பெருகுகின்றன.

வாழ்விடங்கள்

வளர்ந்த கோரைப்புல் பெருகியுள்ள இடங்களை விரும்பி வாழ்கின்றன. இவை நீர் நிலைகள் அருகில் இருக்க விரும்பும். இதற்கு முக்கிய காரணம் இவை பூச்சியுண்ணியாக இருப்பதே. விவசாய நிலங்களில் பூச்சிகளை அழிப்பதால் விவசாய நண்பனாக இருக்கின்றன.

ஒலி

இவற்றின் ஒலி ட்லீஈஈ-ட்லீஈஈ-ட்லீஈஈ என்று தொடர்ந்து ஒலிக்கும். மிகத்துள்ளியமாக இதன் ஒலியைக்கண்டறியலாம்.

இனப்பெருக்கம்
நன்கு வளர்ந்த கோரைப்புற்களில் தன் கூடுகளை அமைக்கும். கூடு கட்டும் பறவைகள் பஞ்சு, சிறு நூல் கண்டுகள், கோரைப்புல்லின் பஞ்சு போன்ற உருப்பு என பல பொருட்களைப் பயன்படுத்தும். மிகவும் மறைவாக கீழிருக்கும் நீர் எவ்வளவு உயர்ந்தாலும் கட்டிய கூட்டை நனைக்காமல் வடிவமைக்கும். இவ்வாறான கூட்டில் 3 முதல் 6 முட்டைகளை இடும். குஞ்சுகளுக்கும் பூச்சிகள் தீனியாக அளிக்கப்படுகிறது

கார்த்திகை மாதத்தில் ஒரு நாள். 😊😊😊

Leave a Reply