FEATUREDNewsSocialmedia

ஓரெழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு

Spread the love

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

1) அ->எட்டு
2) ஆ —–> பசு
3) ஈ–> கொடு, பறக்கும் பூச்சி
4) உ —> சிவன்
5) நா —-> தசை, இறைச்சி
6) ஏ—> அம்பு
7) ஐ–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
8 )ஓ —–> வினா, மதகு நீர் தாங்கும்
பலகை
10) கா —> சோலை, காத்தல்
11) கூ —–> பூமி, கூவுதல்
12) கை —-> கரம், உறுப்பு
13) கோ —–> அரசன், தலைவன், இறைவன்
14) சா —-> இறப்பு, மரணம், பேய், சாதல்
15) சீ —–> இகழ்ச்சி, திருமகள்
16) சே —> எருது, அழிஞ்சில் மரம்
17) சோ-> மதில்
18) தா —-> கொடு, கேட்பது
19) தீ —–> நெருப்பு
20) தூ —-> வெண்மை, தூய்மை
21) து —> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
22) தே —-> நாயகன், தெய்வம்
23) தை —-> மாதம்
24) நா —> நாக்கு
25) நீ—> நின்னை
26) நை -கா-> வருந்து, நைதல்
27) நே –> அன்பு, நேயம்
28) நோ —> நோவு, வருத்தம்
29) நொ —-> நொண்டி, துன்பம்
30) நௌ —> மரக்கலம்
31) பூ —> மலர்
32) பா —–> பாட்டு, நிழல், அழகு
33) பை —–> பாம்புப் படம், பசுமை, உறை
34) போ —> செல்
35) பே —> மேகம், நுரை, அழகு
36) மா —-> மாமரம், பெரிய, விலங்கு
37) மீ —> ஆகாயம், மேலே, உயரம்
38) மூ —> மூன்று.
39) மு —–> மூப்பு
40) மே –> மேன்மை, மேல்
41) மை —-> அஞ்சனம், கண்மை, இருள்
42) யா —> அகலம், மரம்
43) மோ —–> முகர்தல், மோதல்
44) வா —–> அழைத்தல்
45) வை —-> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
46) வீ -> பறவை, பூ, அழகு
9 ) வெள்—> கௌவுதல், கொள்ளை அடித்தல்.
47) டா —>
48) டி —->
49) ள —> நூறு
50) த —-> ஆயிரம்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற – ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி ‘த’ வாகவும்
ம்+இ கூடி ‘மி’ யாகவும்
ழ்+உ கூடி “ழு” வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

நன்றி : Arjun Selvanathan