GeneralNewsSocialmedia

இராமாயணம்

Spread the love

#இராமாயணம்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-

(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்….. முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2600 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2600 ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றியிருக்கவேண்டும். கி.பி. 400 குப்தர்களின் காலத்தில்தான் இவை எழுத்துருபெற்றது. ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும். அத்துடன் சமஸ்கிருத மொழி தோற்றத்திற்கும் வரலாறு உண்டு.

இன்று விஞ்ஞானம் வளர்ந்த நிலையில் ஹோமோசேப்பியன்ஸ்சே 2 லட்ச வருடங்கள்தான் ஆகிறது என்று விஞ்ஞான ரீதியாக மரபணு மூலம் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு துகள் மரபணு மூலம் வரலாற்றையும் கூறமுடியும் இன்னொரு உயிரையும் உருவாக்க முடியும். இவ்வாறிருக்க நேற்று தோன்றிய சமஸ்கிருத மொழியில் கூறப்பட்ட கடவுள்களை நம்புவது எவ்வாறான செயல்?

வால்மீகிதான் இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியது. ஆனால் திரேதா யுகத்தில் 21 லட்ச வருடங்களுக்கு முன்பு வால்மீகி ஆசிரமத்தில் சீதை வாழ்ந்ததாகவும் கூறுகிறது. 21லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் வாழ்ந்தார் வால்மீகி எனில், துவாபர யுகமும் தாண்டி கலியுகத்தில் சமீபத்தில் தோன்றிய சமஸ்கிருதத்தில் எவ்வாறு இராமாயணத்தை எழுதியிருக்கமுடியும்? இவ்வாறானவற்றை நம்பும் மூடர்களை என்னவென்று சொல்வது?

உண்மையில் நடந்தது என்னவெனில்…
கி.மு 6ம் நூற்றாண்டுகளிற்கு பிறகு வாய்வழியாக செய்யுள் வடிவில் உருவாகியது இந்த கற்பனை கதை. கதை கூறும்போது 21 லட்ச வருடங்களிற்கு முன் இக்கதை நடந்ததாகவும், (முன்னொரு காலத்தில் என்று கதை கூறுவதுபோல) ஏற்கனவே இருந்த இடங்களைவைத்து கதைகளை புனைந்தார்கள். (இன்றைய சினிமா எடுப்பதுபோல. ஏற்கனவே இருந்த நிலப்பரப்பை இராமர் கட்டிய பாலம் எனவும் அதற்கு ஒரு தேவை இருந்ததாகவும் கதைகளை உருவாக்கினார்கள்.)

இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது கதை நடந்ததாக கூறப்படுவது 21 லட்ச வருடங்களிற்குமுன் திரேதா யுகத்தில் என்கிறார்கள். அதன்பிறகு துவாபர யுகம் இப்போது கலியுகம் என்கிறார்கள். அவ்வாறு பார்த்தாலும் திரேதா யுகம் அழிந்து துவாபரயுகம் ஆரம்பித்து அது அழிந்து கலியுகம் ஆரம்பித்தபின்பும் திரேதாயுக நிலப்பரப்புகளும், இராமர் மூன்று கோடுபோட்ட அணிலும், ஏன் 21 லட்ச வருடங்களாக வால்மீகியும் இருப்பது வேடிக்கை.

விஞ்ஞானம்.. பரிணாம வளர்ச்சி, கண்ட ஓட்ட அசைவுகள், ஒவ்வொரு உயிர்கள், கண்டெடுக்கபட்ட பொருட்கள் எவ்வளவு பழமையானது என்று பலவற்றை நிரூபித்தபின்னும், புவியை தாண்டி பல கோள்கள், ஞாயிற்றுதொகுதிகள், இருப்பதை உறுதிசெய்த பின்பும், புவியில் சமீபத்தில் தோன்றிய ஒரு மொழியில் யாரோ மனிதன் கூறிய கதையில் அல்லது புத்தகத்தில் உள்ளவற்றை கடவுள் என்று நம்பினால் இவர்களை என்னவென்று கூறுவது?

பல நிரூபிக்கப்பட்டபின்பும் இவை தெரியாது அல்லது இவை தவறு என்பதுபோல கண்களை மூடிக்கொண்டு மதங்கள் கூறும் பாலை அருந்தி அமைதியாவது ஐந்தறிவு பூனைகளின் செயலுக்கு ஒப்பானது.